குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 நாள் டிராபிக் ஒழுங்குபடுத்தும் பணி : காவல் துறைக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும், எத்துறையில் பணிபுரிந்தாலும் அவர்களிடம் அபராதம் வசூலித்தால் மட்டும் போதாது. அவர்களை 3 நாள் சாலைவிதிகளை கடைபிடிக்கச் செய்யும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அதுவும் அவர்கள் வாழ்கின்ற, சார்ந்திருக்கின்ற பகுதிகளில் உள்ள சிக்னலில் காவல்துறையினருடன் இணைந்து சாலைவிதிகளை கடைபிடிக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அப்போது தான் அவருக்கு சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டிய விழிப்புணர்வு ஏற்படும். இதனால் எவரும் மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்ட முன்வர மாட்டார்கள்.

Related Stories: