சென்னை: பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி ஆவணங்களை ஒப்படைக்கவில்லை என பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன் நாளை மறுநாள் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.