புதுடெல்லி: மத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் வோடபோன் ஐடியா நிறுவனத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று அதன் தலைவர் குமாரமங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார். நிறுவன உரிமை தொகை, அலைக்கற்றை பயன்பாட்டிற்கான கட்டணம் என வோடபோன் ஐடியா நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ.53 ஆயிரம் கோடியை உடனே செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் 4-வது காலாண்டில் மட்டும் சுமார் ரூ.51 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசு உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. மத்திய அரசு உதவி செய்யாவிட்டால் நிறுவனத்தை இழுத்து மூடுவதை தவிர வேறுவழியில்லை என்று வோடபோன் ஐடியா தலைவர் குமாரமங்கலம் பிர்லா கூறியுள்ளார்.