சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த ஜான் கிரிகோரி விலகினார். அதனால் அயர்லாந்தைச் சேர்ந்த ஸ்காட்லாந்துகாரரான ஒவென் கொலம்பா ெகாய்லே தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்காட்லாந்தில் பிறந்த ஓவென்(53), அயர்லாந்து தேசிய அணிக்காக விளையாடி உள்ளார். அதுமட்டுமல்ல இங்கிலாந்து, ஸ்காட்காலந்து கால்பந்து கிளப்களுக்காக 2007ம் ஆண்டு வரை விளையாடி உள்ளார். அதன் பிறகு பயிற்சியாளரானார். ஸ்காட்லாந்தில் உள்ள ரோஸ் கவுன்டி கால்பந்து கிளப் பயிற்சியாளராக இருந்த ஒவென் இப்போது சென்னையின் எப்சி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.