டெல்லி: மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாகவே செயல்படுகிறது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பங்களிப்பால் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் மலேரியாவின் தாக்குதல் 70 சதவிகிதம் குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு மலேரியா பாதிப்பால் ஏற்பட்ட இறப்புகள் 2018-ல் 41 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து மலேரியாவுக்கு எதிரான முன்னெடுப்புகள் மிகச்சிறப்பாக இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு மலேரியா நோய் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,48,000 மற்றும் பலியானோரின் எண்ணிக்கை 16,310 ஆகும்.