சைபீரியாவில் கடந்த ஆண்டு உறை பனியின் கீழே கண்டறியப்பட்ட நாய் போன்ற உருவ அமைப்புடைய விலங்கின் வயது ஆயிரம், இரண்டாயிரம் அல்ல சுமார் 18,000 என்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு சைபீரியாவின் யாகுட்ஸ்கின் வடகிழக்கில், இண்டிகிர்கா ஆற்றின் அருகே வேட்டைக்காரர்களால் நிரந்தரமாக மூடப்பட்டிருந்த பனிகட்டிகளுக்கு அடியில் விலங்கின் உடல் ஒன்று கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்ட விலங்கானது நாய் அல்லது ஓநாய் இனமா என்று குழப்பம் ஏற்பட்டது. கண்டெடுக்கப்பட்ட உடலானது எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது, அது என்ன இனம் என்பதை கண்டறிய ஆய்வாளர்கள் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தினர். இறுதியில் ரேடியோகார்பன் டேட்டிங் தொழிநுட்பம் மூலம், கண்டறியப்பட்ட விலங்கின் உடலானது 18,000 ஆண்டுகள் பழமையானது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.