செயற்கை சூரியன்

நன்றி குங்குமம் முத்தாரம்

உலகில் ஏதாவது ஒரு பொருள் புதிதாக அறிமுகமானால் அடுத்த நிமிடத்தில் அதே மாதிரி ஒரு பொருளை நகல் எடுப்பதில் கில்லாடி சீனா என்பது நமக்குத் தெரியும். பொருட்களை மட்டுமல்ல, இயற்கையையும் நகல் எடுக்க ஆரம்பித்துவிட்டது சீனா. சில மாதங்களுக்கு முன்பு நிலாவை நகல் எடுத்து செய்ற்கை நிலவை உண்டாக்கி சாதனை செய்தார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த செயற்கை நிலவு சீனாவில் ஒளிவீசப் போகிறது. இதற்கான வேலை இப்போது துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சூரியனையும் செயற்கையாக வடிவமைக்கப்போகிறார்கள். சூரியனின் வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்சியஸ். அதனால் சூரியனில் அழுத்தம் அதிகமாக இருக்கும். அணு இணைவு இயல்பாக நடக்கும். இந்த அழுத்தத்தை செயற்கையாக உருவாக்க முடியாது. ஆனால், 15 மில்லியன் டிகிரி செல்சியஸைவிட அதிக வெப்பத்தை மனித னால் உருவாக்கிட முடியும். சீனா இதைத்தான் செய்திருக்கிறது.

மிக அதிக வெப்பத்தை உருவாக்கி அதன் மூலம் அணு இணைவை நடத்தி செயற்கை சூரியனை உருவாக்கப்போகிறது சீனா. இந்தச் சோதனை 2019-ம் வருடத்துக்குள் முடிவடையலாம். இந்தச் செயற்கைச் சூரியனின் வெப்பநிலை 100 மில்லியன் டிகிரி செல்சியஸ். அதாவது ஆறு சூரியனின் வெப்பம். சூழலியல் ஆர்வலர்கள் இந்த முயற்சிக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்கள். இவ்வளவு வெப்பத்தை வெளியேற்றும் சோதனையால் அதிகளவு கதிர்வீச்சு பரவும் என்பது அவர்களின் குற்றச் சாட்டு. ஆனால், இதில் கதிர்வீச்சு அபாயமில்லை என்கின்றனர் சீன விஞ்ஞானிகள்.  2025-க்குள் செயற்கைச் சூரியன் வந்துவிடும். சீனாவின் ஒட்டுமொத்த மின் சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, மற்ற நாடுகளுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யவும் உதவப்போகிறது செயற்கை சூரியன்.

Related Stories: