மேரிலாந்தின் கிரீன் பெல்ட்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு ஒன்று வியாழன் கிரகத்தின் நிலவான யூரோப்பாவின் மேற்பரப்பிற்கு மேலே நீர் நீராவியின் தடயங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்று Nature Astronomy பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதில் யூரோப்பாவின் மேற்பரப்பலிருந்து ஆவி நிலையில் நீர் வெளியேறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் விஞ்ஞானிகள் நீர் திரவத்தை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றாலும், நீராவி வடிவத்தில் நீர் இருப்பதை உறுதி செய்திருப்பது அடுத்தக்கட்டம் என நாசாவின் விஞ்ஞானியான லூகாஸ் பகானினி நாசா அறிவிக்கையில் தெரிவித்துள்ளார். இதேவேளை நாசாவின் கலிலியோ விண்வெளி ஓடத்தின் உதவியுடன் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே ஈரோப்பாவில் மின்னைக் கடத்தக்கூடிய திரவம் ஒன்று இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.