பல்லாவரம்: சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்தியவாணி (55). இவர் சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் கணக்காளராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவ விடுப்பில் பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், லட்சுமி நகரில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். நேற்று வீட்டில் தனியாக இருந்த சத்தியவாணி, கதவை திறந்து வைத்து விட்டு, வீட்டின் வராண்டாவில் நின்றிருந்தார். அப்போது இவரது வீட்டிற்கு வந்த வாலிபர் ஒருவர், தான் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்துள்ளதாகவும், தனக்கு குடிக்க தண்ணீர் தருமாறு கூறினான். அதனை உண்மை என்று நம்பி, சத்தியவாணி தண்ணீர் கொண்டு வருவதற்காக சமையல் அறை நோக்கி சென்றார்.