திருடனுக்கு அடி உதை

அண்ணாநகர்: நெற்குன்றத்தை சேர்ந்த சசிகுமார் (31), நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே தனது பைக்கை நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்தபோது, வாலிபர் ஒருவர், பைக் லாக்கை உடைத்து திருட முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சசிகுமார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பொதுமக்கள் அந்த வாலிபரை சரமாரி தாக்கி, அமைந்தகரை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், நெற்குன்றம் பகுதியை சேர்ந்த சத்யா (19) என்பதும், பெரியமேடு, கோயம்பேடு பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டவர் என்பதும் தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

Related Stories: