தண்டையார்பேட்டை: திருவொற்றியூர் ரெட்டமலை சீனிவாசன் நகரை சேர்ந்த நிவேதா (22), மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்ததும், மாநகர பேருந்து (த.எ: 159) மூலம் திருவொற்றியூர் புறப்பட்டார். வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே பேருந்து நின்றபோது, அதில் ஏறிய 2 மர்ம நபர்கள், நிவேதா கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினர்.