கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாய ராஜபக்ச வெற்றிப்பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையில் சனிக்கிழமை நடந்த தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தாய ராஜபக்ச 69,24,255 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இலங்கை ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச 55,64,233 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.