பாங்காக்: தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்து பேசினார். தென்கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார்.