சென்னை,: தமிழக பாஜக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து நவம்பர் 16ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வாங்கப்படும் என்று கட்சி தலைமை அறிவித்தது. சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த விருப்ப மனு வினியோகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணஜ், நடிகை கவுதமி, துணை தலைவர் எம்.என்.ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமானோர் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தனர். சென்னை மேயர் பதவிக்கு மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் போட்டியிட கோரி இளைஞர் அணியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் போட்டி போட்டு விருப்பமனுக்களை தாக்கல் செய்தனர். இதே போல சென்னை கோட்ட பொறுப்பாளர் சக்ரவர்த்தி போட்டியிட கோரி 5 பேரும் விருப்ப மனுக்களை அளித்தனர். இதே போல அதிக அளவில் இளைஞர் போட்டியிட கோரி விருப்ப மனுக்களை அளித்தனர்.