ஹாங்காங்: பி.டபுள்யு.எப் உலக டூர் சூப்பர் 500 அந்தஸ்து பெற்ற ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றார். கால் இறுதியில் சீனாவின் சென் லாங்குடன் நேற்று மோதிய கிடாம்பி 21-13 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இந்த செட் 15 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக சென் லாங் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கிடாம்பி அரை இறுதிக்கு முன்னேறினார்.