லண்டன்: ஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் ஜான் போர்க் பிரிவு லீக் ஆட்டத்தில், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்திய சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் அரை இறுதிக்கு முன்னேறினார். லண்டன் ஓ2 அரங்கில் நடைபெற்று வரும் இந்த தொடரில், ஆண்டு இறுதி உலக தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மற்றும் ஜோடிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் களமிறங்கி உள்ளனர். ஒற்றையர் பிரில் ஜான் போர்க், ஆந்த்ரே அகாசி என இரு பிரிவுகளில் லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஜான் போர்க் பிரிவில் இடம் பெற்றுள்ள ரோஜர் பெடரர் (3வது ரேங்க்) தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். எனினும், 2வது லீக் ஆட்டத்தில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரட்டினியை (8வது ரேங்க்) வீழ்த்திய பெடரர் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார்.