கடலூர்: கடலூரில் உள்ள மத்திய சிறையில் சிறைத்துறை டிஐஜி தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிறையில் கஞ்சா, ஆயுதங்கள், செல்போன், தடைசெய்யப்பட்ட பொருட்கள் புழங்குவதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.