கொடிவேரி தடுப்பணை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பவானி ஆற்றில் வினாடிக்கு 5,250 கனஅடி நீர் செல்வதால் கொடிவேரி தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Related Stories: