மதுரை மீனாட்சியம்மனுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் வைர ஒட்டியாணம்

மதுரை: மதுரை மீனாட்சியம்மனுக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபர்கள் ரூ.11 லட்சம் மதிப்புள்ள வைர ஒட்டியாணம் உபயமாக வழங்கியுள்ளனர் என கோயில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.   அவர் கூறியதாவது:  மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்னையைச் சேர்ந்த வள்ளியப்பன், நாகப்பன் மற்றும் கணேசன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  வைர ஒட்டியாணம் உபயமாக வழங்கியுள்ளனர். இந்த வைர ஒட்டியாணம் 180 கிராம் தங்கம், 15 காரட் கொண்ட வைரத்தால் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.11 லட்சத்து 10 ஆயிரம். தினமும் மீனாட்சியம்மனுக்கு வைரகிரீடம், வைரக்கிளி, வைரமூக்குத்தி சாத்தப்பட்டு இருந்த நிலையில் உபயமாக பெறப்பட்ட வைர ஒட்டியாணமும் சாத்துபடி செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: