திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற 27ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. அன்று அதிகாலை 2.30 மணியில் இருந்து 3.30 மணிவரை சுப்ரபாத சேவை நடக்கிறது. தொடர்ந்து தோமால சேவை, அர்ச்சனை, நெய்வேத்தியம் ஆகியவை ஏகாந்தமாக நடக்கிறது. நெய்வேத்தியம் செய்த பொருட்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை தங்க வாசல் அருகில் கண்டா மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்பசுவாமி சர்வ பூபால வாகனத்திலும், உற்சவர் சேனாதிபதி விஸ்வசேனர் தங்க திருச்சி வாகனத்திலும் எழுந்தருள செய்து தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.