புவனேஸ்வர்: கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில் 26 ரயில் நிலையங்களில் 100 அடி உயர தேசியக்கொடி கம்பம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் விசாகபட்டினம் ஆகிய இடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் நிரந்தர நினைவு தேசிய கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தில் 26 ரயில் நிலையங்களில் நிரந்தரமாக கொடிக்கம்பங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த மண்டல நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரயில் பயணிகளிடம் தேசப்பற்றை வலியுறுத்தும் வகையில் மாவட்ட தலைநகரங்கள், வரலாற்று முக்கித்துவம் வாய்ந்த இடங்கள், சுற்றுலா தளங்களில் நினைவு தேசியக்கொடிகள் அமைக்க ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.