சென்னை: தேனாம்பேட்டை டாஸ்மாக் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் டிரைவருக்கு சரமரியாக அடி உதை விழுந்தது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் கார் டிரைவராக சிவகுமார் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் ேநற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது டாஸ்மாக் அருகே செல்லும் போது பாரில் இருந்து வெளியே வந்த வாலிபர் எதிர்பாராத விதமாக சிவகுமார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.