தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் நடத்தும் காத்திருப்பு போராட்டத்திற்கு ஒருநாள் மட்டும் அனுமதி: உயர்நீதிமன்றம்

சென்னை: தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் நடத்தும் காத்திருப்பு போராட்டத்திற்கு ஒருநாள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க, விவசாயக்கடன் வசூலை தள்ளிவைக்க கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என அய்யாகண்ணுவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Related Stories: