உடல்நலக் குறைவு, சாலை விபத்துகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி : முதலமைச்சர் பழனிசாமி

சென்னை : உடல்நலக்குறைவாலும், சாலை விபத்துகளிலும் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.விருதுநகர், கன்னியாகுமரி, திருப்பூர், சேலம், ராமநாதபுரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், காவலர் தொடங்கி, ஆய்வாளராகப் பணிபுரிந்த 23 பேர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதேபோல் இரு காவலர்கள் சாலை விபத்துகளில் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Related Stories: