முன்னாள் கேப்டன் தோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் வரும் 24-ம் தேதி ஆலோசனை: சவுரவ் கங்குலி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் வரும் 24-ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலி கூறியுள்ளார். தோனி விளையாடிய 90 டெஸ்ட் போட்டிகளில் 60 டெஸ்டில் தலைமை வகித்து அணிக்கு 27 வெற்றிகளை தேடித் தந்தார். இந்நிலையில் 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் உலக கோப்பைக்கு பிறகு 2 மாதங்கள் ஓய்வு எடுப்பதாக டோனி கூறி சென்றார். இந்நிலையில் தோனியின் எதிர்காலம் குறித்தும் ஓய்வுபெறுவது குறித்தும் அவரே முடிவு எடுப்பார், அவரை ஓய்வுபெற வற்புறுத்தக்கூடாது. மேலும் மேலும் ஒய்வு குறித்து தோனியிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இது தொடர்பாக பேசுகையில் தோனியின் எதிர்காலம் குறித்து 24-ந்தேதி ஆலோசனை நடத்தப்படும். அப்போது தோனியின் எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினருடன் ஆலோசனை நடத்தப்படும். மேலும் தோனியுடனும் கருத்து கேட்கப்படும். பின்னர் எனது கருத்தை தெரிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: