மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு கோடபடோ பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை இரவு தென்மேற்கில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கடியில் 2 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவாகியது. இதனால் பெரும்பாலான கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர்.