பெரம்பூர்: சென்னை வியாசர்பாடியில் 3 கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.சென்னை வியாசர்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் எஸ்.ஐ பிரேம் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற பைக்கை நிறுத்துமாறு கூறியும் நிற்காமல் சென்றது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அதனை துரத்தினர். அந்த நபர் வியாசர்பாடி எஸ்.எம் நகர் பகுதியில் வேகமாக சென்று வேகத்தடையில் மோதி கீழே விழுந்தார். இதனால் அவரது கை முறிந்தது.