சில்லி பாயின்ட்...

* ‘எல்லோரையும் போலவே நானும் சாதாரணமாவன் தான். ஆனால், எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்வதில் சிறப்பாக செயல்படுகிறேன்’ என்று இந்திய அணி நட்சத்திரம் எம்.எஸ்.டோனி கூறியுள்ளார்.

* டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை சயாகா டாகஹாஷியுடன் நேற்று மோதிய இந்திய நட்சத்திரம் சாய்னா நெஹ்வால் 15-21, 21-23 என்ற நேர் செட்களில் போராடி தோற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா 21-11, 21-11 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கன்டா சுனியாமாவை எளிதாக வீழ்த்தினார்.

* இந்திய அணி பகல்/இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்துவோம் என்று கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

* சுல்தான் ஆப் ஜொகோர் கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் நேற்று மோதிய இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

* பிரபல லீக் கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரருக்கான தங்கக் காலணி விருதை பார்சிலோனா அணியின் லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா) தொடர்ந்து 3வது சீசனாக வென்றுள்ளார்.

* புரோ கபடி லீக் தொடரின் முதல் அரை இறுதியில் தபாங் டெல்லி கே.சி. அணி 44-38 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.

Related Stories: