சென்னை: சென்னை பல்கலைக்கழக கல்லூரிகள் இடையேயான தடகளப் போட்டியில் லயோலா, எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன. சென்னை பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான 52வது ஏ.எல்.ராமசாமி நினைவு தடகளப் போட்டிகள் நடைபெற்றன. நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இத்தொடர் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. மாணவர்கள் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்ற லயோலா கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது இடம் டிஜி வைஷ்ணவா கல்லூரிக்கு கிடைத்தது. மாணவிகளுக்கான பிரிவில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி அதிக புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது.