நெதர்லாந்து: நெதர்லாந்தில் பண்ணை வீடு ஒன்றின் பாதாள அறையில் சுமார் 9 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த 6 இளைஞர்களையும் அவரது தந்தையையும் போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். அந்நாட்டின் ரூனர்வொல்ட் கிராமத்தில் பார் ஒன்றுக்கு வித்தியாசமான தோற்றத்துடன் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவர் மீது சந்தேகமடைந்த பார் உரிமையாளர், அவரிடம் விசாரித்த போது தாங்கள் ரகசிய அறையில் அடைக்கப்பட்டிருந்ததாக மது போதையில் அந்த இளைஞர் உளறி உள்ளார். இது குறித்து பார் உரிமையாளர் அளித்த தகவலின் பெயரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இளைஞர் கூறிய அந்த பண்ணை வீட்டில் பாதாள அறை ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.