சென்னை: விக்கிரவாண்டியில் 24, நாங்குநேரியில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் குறித்து விழுப்புரம் கலெக்டர் சுப்ரமணியன் கூறியதாவது: தொகுதியில் 139 இடங்களில் 275 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 24 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக மாவட்டம் முழுவதும் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல்பணியில் 1,333 பேர் ஈடுபட உள்ளனர். 29 மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். விக்கிரவாண்டி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,23,387. இதில் ஆண்கள் 1,11,607, பெண்கள் 1,11,546, திருநங்கை 25, தபால்வாக்குகள் 209.