போக்குவரத்து போலீசாரிடம் மாணவர்கள் வாக்குவாதம்

சென்னை: பைக் ஆவணங்களை கேட்ட போக்குவரத்து போலீசாரிடம் கல்லூரி மாணவர்கள் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னையில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனையின் போது ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கும், ஆவணங்கள் இன்றி, சாலை விதிகளை மீறுபவர்களுக்கும் போக்குவரத்து  போலீசார் அபராதம் வசூலிக்கின்றனர். அதன்படி நேற்றுமுன்தினம்  வழக்கம் போல் அண்ணாசாலை பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சாலை விதிகளுக்கு மாறாக பைக்கில் வந்த  2 பேரை மறித்து ஆவணங்களை கேட்டுள்ளனர். அதற்கு பைக்கில் வந்தவர்கள், ஆவணங்களை கொடுக்காமல் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்திடம் ஒருமையில் பேசி தகராறு செய்துள்ளனர்.

இதையடுத்து போக்குவரத்து போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் கல்லூரி மாணவர்கள் முகமது எகியா, முகமது ஆமின் என்பது தெரியவந்தது. மேலும் அண்ணாசதுக்கம்  போக்குவரத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: