மைசூரு: தென் ஆப்ரிக்கா ஏ அணியுடனான 2வது டெஸ்டில் (அதிகாரப்பூர்வமற்றது), இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன் குவித்துள்ளது.மைசூரு, நரசிம்ம ராஜா மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் (4 நாள்), டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா ஏ அணி முதலில் பந்துவீசியது. இந்தியா ஏ அணி தொடக்க வீரர்களாக ஈஸ்வரன், ஷுப்மான் கில் களமிறங்கினர். ஈஸ்வரன் 5 ரன் மட்டுமே எடுத்து என்ஜிடி வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார்.அடுத்து வந்த பிரியங்க் பாஞ்ச்சால் 6 ரன் எடுத்து முல்டர் பந்துவீச்சில் டி புருயின் வசம் பிடிபட்டார். இந்தியா ஏ அணி 16.2 ஓவரில் 31 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ஷுப்மான் கில் - கருண் நாயர் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.