புழல்: செங்குன்றத்தில் விபத்துக்களை தடுப்பது குறித்து தண்ணீர் டேங்கர் லாரி டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தண்ணீர் டேங்கர் லாரி டிரைவர்களுக்கு விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் செங்குன்றம் அடுத்த ஆலமரம் பகுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் மேடவாக்கம் என்.நிஜலிங்கம் தலைமை தாங்கினார். சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அனைவரையும் வரவேற்றார். சங்க நிர்வாகிகள் செல்வராஜ், சரவணன், மணிமாறன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செங்குன்றம் அடுத்த ஆலமரம் பகுதியில் விபத்துகளை தடுக்க விழிப்புணர்வு கூட்டம்: 500 லாரி டிரைவர்கள் பங்கேற்பு
- விபத்துக்கள்
- டிரக் டிரைவர்கள்
- விழிப்புணர்வு கூட்டம்
- பகுதியில்
- அலமேடாவில்
- செங்கடல்
- கிளிஃப் விழிப்புணர்வு கூட்டம்