சென்னை: தாராபுரத்தில் விவசாய நிலங்களில் பவர்கிரிட் நிறுவனம் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய கூட்டு இயக்க தலைவர்களை கைது செய்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக அரசு அவர்களை விடுதலை செய்வதோடு, இப்பணிகளுக்காக விவசாயிகளின் கருத்தை கேட்டு முன்அனுமதி பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.