ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நாட்டின்ரியோ டி ஜெனிரோவில் செயல்பட்டு வரும் பாடிம் என்ற தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மருத்துவமனையின் அனைத்து தளங்களுக்கும் பரவியது. தீயினால் உண்டான புகை காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 65 வயதை கடந்த முதியோரில் 11 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். சக்கர நாற்காலி, சக்கர படுக்கை, தூக்கு படுக்கை (ஸ்ட்ரெச்சர்) ஆகியவற்றின் மூலம் நோயாளிகள் வேறு வார்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.