சென்னை: மேற்கு சைதாப்பேட்டை 2வது தெருவை சேர்ந்த ரமேஷ் (39), நேற்று அதிகாலை 4 மணியளவில் சைதாப்பேட்டை ரயில் நிலையம் வந்து, ரயிலுக்காக நடைமேடையில் அமர்ந்துள்ளார். அப்போது அங்கு வந்த 2 பேர், திடீரென ரமேஷின் தலை மற்றும் காலில் கத்தியால் வெட்டிவிட்டு, அவர் வைத்திருந்த 450 மற்றும் 6 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.