கடலூர்: கடலூர் மாவட்டம் மங்களூர் சுற்றுவட்டாரத்தில் ஆய்வு செய்த பின் மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வழங்கப்பட்டன. திட்டக்குடி அடுத்த மேலாதனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 76 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் சத்துணவு சாப்பிடும் 70 மாணவர்களுக்கு நேற்று வழங்கப்பட்ட முட்டைகள் அழுகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு முட்டைகள் வழங்காமல் நிறுத்திவைக்கப்பட்டது. மேலும் 10 சத்துணவு மையங்களில் முட்டைகள் கெட்டு போயிருந்ததாகவும் புகார்கள் பதிவாகின.