ஈரோடு: ஈரோடு மாவட்டம் வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்திய ராணுவத்தின் பல நிலைகளுக்கான ஆள் சேர்ப்பு முகாம் செப்டம்பர் மாதம் 2 -ம் தேதி வரை நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கி காலை 7.30 மணி வரை நடைபெறும். ஈரோடு, கோயம்புத்தூர்,மதுரை, சேலம், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் கணினி மூலம் சரிபார்க்கப்பட்டு தேர்வானவர்களுக்கு இந்த முகாமில் கலந்து கொள்வதற்கான அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.