நாமக்கல்: நாமக்கல் அருகே பொறியியல் மாணவன் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதற்காக பேராசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்து இந்த விபரீத முடிவை மாணவன் எடுத்ததாக கூறப்படுகிறது. நாமக்கல் அடுத்த பழைய பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் தீபக். இவர் திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவன் தீபக் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பேராசிரியர்கள் மாணவரை கண்டித்ததாக சொல்லப்படுகிறது.