சென்னை: சுவர் ஏறி குதித்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார் என்பது தெரியாத நிலையில் லுக் அவுட் போஸ்டரும் பிறப்பிக்கப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றார். சிபிஐயின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் அடைத்து வைக்கப்பட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகத் தெரிவித்தார். இதில் தி.மு.க. அழைப்பை ஏற்று பங்கேற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.