சென்னை: ப.சிதம்பரம் ஒரு பயங்கரவாதி அல்ல என்றும் நாட்டின் உள்துறை மற்றும் நிதி அமைச்சராக இருந்தவர் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார். ப.சிதம்பரத்திற்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரத்தை அவமானப்படுத்தி, மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் நோக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார். சட்டரீதியான பாதுகாப்புகளை மதிக்காமல் கைது செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது என்று திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.