நேற்று சற்றே குறைந்த நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு

சென்னை: தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை நேற்று சற்றே குறைந்த நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் துவக்கம் முதலே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைவதும் பின்னர் மீண்டும் உயர்வதுமாக உள்ளது. இந்நிலையில் திங்கட்கிழமை சவரனுக்கு 184 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 160 ரூபாய் அதிகரித்து, 28 ஆயிரத்து 832 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 20 ரூபாய் அதிகரித்து மூவாயிரத்து 604 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி விலையும் கிராமுக்கு 60 காசுகள் வரை அதிகரித்துள்ளது. அதன்படி சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 48 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 600 ரூபாய் உயர்ந்து 48 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மேலும் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது. இந்நிலையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.3587-க்கும் சவரன் ரூ.28,696-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.47.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Related Stories: