புதுடெல்லி: ‘‘பாஜ.வுக்கு வாக்களிக்காதவர்களும், உங்களை நெருங்கும் வகையில் பணியாற்ற வேண்டும்’’ என பாஜ எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். பாஜ எம்.பி.க்களுக்கு ‘அப்யாஸ் வர்கா’ என்ற பெயரில் 2 நாள் பயிற்சி முகாம் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நிறைவடைந்தது. இதில் 380க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘கட்சி தொண்டர்கள் தாயை போன்றவர்கள். அவர்களை அலட்சியப்படுத்தக் கூடாது. தேர்தலில் உங்களின் வெற்றிக்காக உழைத்த அவர்களை மறக்காமல், அவர்களுடன் நீங்கள் தொடர்பில் இருக்க வேண்டும்’’ என அறிவுரை கூறினார்.