நெல்லை, வேளாங்கண்ணி, எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில்

சென்னை: வேளாங்கன்னி, திருநெல்வேலி, எர்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களுக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 10ம் ேததி சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதைப்போன்று மறு மார்க்கத்தில் செப்டம்பர் 2ம் ேததி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. திருநெல்வேலியிலிருந்து வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 7ம் தேதி சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. ெசன்ட்ரலிருந்து எர்ணாகுளத்திற்கு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் ஆகஸ்ட் 9ம் தேதி இயக்கப்படவுள்ளது. மேலும் தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு ஜூலை 26ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories: