முரசொலி அலுவலக வளாகத்தில் வருகிற 7ம் தேதி கலைஞர் சிலை திறப்பு விழா: மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், பரூக் அப்துல்லா, நாராயணசாமி பங்கேற்பு

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் வருகிற 7ம் தேதி கலைஞர் சிலை திறப்பு விழா நடக்கிறது. இதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், பரூக் அப்துல்லா, நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.சென்னை ேகாடம்பாகத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா முரசொலி வளாகத்தில் வருகிற 7ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிதலைமை தாங்குகிறார். உருவச்சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்.

இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் உருவச்சிலை திறப்பு விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார். மம்தா பானர்ஜி,பரூக் அப்துல்லா, நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் நன்றி கூறுகிறார்.

Related Stories: