சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக 2016ம் ஆண்டு முதல் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அக்டோபர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனுக்கள் மீதான ஆட்சேபனைகளுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் நடைமுறை வரும் உள்ளாட்சி தேர்தலில் புதிதாக அமல்படுத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மாதிரி ஒப்புகை சீட்டில் எந்த பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.