பழுதை சரி செய்த கப்பல் ஊழியர்கள் தரைதட்டிய சரக்கு கப்பல் தூக்கு பாலத்தை கடந்தது

ராமேஸ்வரம்: பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் தரை தட்டிய கப்பல், பழுது பார்க்கப்பட்ட பின் நேற்று தூக்குப்பாலத்தை கடந்து சென்றது.

ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாலத்தை கடந்து பாக் ஜலசந்தி கடல் பகுதிக்கு செல்வதற்காக கிரேன் பொருத்தப்பட்ட 150 அடி நீளமுள்ள சரக்கு கப்பல் கடந்த 16ம் தேதி பாம்பன் துறைமுகத்துக்கு வந்தது. மன்னார் வளைகுடா கடலில் குருசடைத்தீவு - சிங்கிலி தீவுக்கு இடையே பலத்த காற்று மற்றும் கடல் நீரோட்டத்தின் போக்கினால் குந்துகால் கடல் பகுதியில் இக்கப்பல் தரை தட்டி கரை ஒதுங்கியது. குந்துகால் கடல் பகுதியை கடந்து, பாம்பன் துறைமுக கடல் பகுதிக்கு வந்தால்தான் பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து செல்ல முடியும். எனவே, கப்பலை மீட்கும் பணியில் ஊழியர்கள், மீனவர்கள் ஈடுபட்டனர். தற்போது பழுது சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாம்பன் தூக்குப்பாலத்தை சரக்கு கப்பல் கடந்து பாக் ஜலசந்தி கடல் பகுதிக்கு நேற்று சென்றது.

Related Stories: