சென்னை: அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்று உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலம் கண்ணன்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் ஜூலை முதல் தேதியிலிருந்து அத்தி வரதர் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளார். முதல் நாளிலிருந்து நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. கூட்டத்தை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சரியாக செய்யவில்லை.