விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நோயாளி காலை சுற்றிய பாம்பு

விழுப்புரம்:  விழுப்புரம் அரசு மருத்துவமனை ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவில் 30க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அந்த வார்டில் விஷ பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அங்கு சிகிச்சை பெற்று வரும் அரிராஜ் காலில் அந்த பாம்பு சுற்றிக் கொண்டது. உடன் தங்கியிருந்த அவரது தாய் ஜெயந்தி, தந்தை அரிகோவிந்தன் இதை பார்த்து கூச்சல்போடவே, அங்கிருந்த நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து அரிராஜ் காலில் சுற்றிய பாம்பு அவரை கடித்துவிட்டதாக எண்ணி அடித்துக் கொன்றனர். டாக்டர் சோதனையில் பாம்பு கடித்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. இதையடுத்து அரிராஜை தீவிர கண்காணிப்பில் வைத்த டாக்டர்கள் அவரது உடலில் விஷம் ஏறுகிறதா? என பரிசோதனை செய்தனர்.

Related Stories: